sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்

/

உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்

உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்

உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்


ADDED : நவ 24, 2024 07:40 PM

Google News

ADDED : நவ 24, 2024 07:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூரில் இருந்து, பாலுார் வழியாக, செங்கல்பட்டுக்கு, தடம் எண்;டி22ஏ, அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

உள்ளாவூர் சுற்றுவட்டார பகுதியினர், இப்பேருந்து சேவையை பயன்படுத்தி செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கடைத்தெரு மற்றும் கல்வி கூடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், இப்பேருந்து சேவை, மூன்று ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியினர், உள்ளாவூரில் இருந்து, 3 கி.மீ., துாரத்திலான காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலையில் உள்ள, உள்ளாவூர் கேட் வரை நடந்து வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, வாலாஜாபாத், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

இதனால், முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவிர் உள்ளிட்ட பலர் அவதிபட்டு வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியினரின் தொடர் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை வாயிலாக நிறுத்தம் செய்த பேருந்து சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us