/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிந்தவாடி தார் சாலையில் விரிசல்
/
கோவிந்தவாடி தார் சாலையில் விரிசல்
ADDED : செப் 23, 2024 05:51 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் இருந்து, புதுப்பாக்கம் வழியாக, பெரியகரும்பூர் பகுதிக்கு செல்லும், 5 கி.மீ., துார சாலை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலை வழியாக, கோவிந்தவாடி, புதுப்பாக்கம், பெரியகரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், கூரம்கேட் வழியாக காஞ்சிபுரம் சென்று வருகின்றனர்.
இந்த சாலை, கடந்த ஆண்டு தார் சாலையாக அமைத்தனர். சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், இரு புறமும் சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
குறிப்பாக, கோவிந்தவாடி முதல் கோவிந்தவாடி சிற்றேரிக்கரை ஓரம் மற்றும் அதன் எதிர்திசை என, இரு புறமும் சாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, கோவிந்தவாடி - புதுப்பாக்கம் இடையே, சாலையோரம் ஏற்பட்டிருக்கும் விரிசலை சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.