/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை
/
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை
ADDED : பிப் 21, 2024 12:22 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 40 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு மே 8ல் நடந்தது.
இதை தொடர்ந்து பழைய கழிப்பறை இடிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக பள்ளி வளாகத்தில் 'மொபைல் டாய்லெட்' வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிநவீன கழிப்பறை கட்டுமானப் பணி நிறைவடைந்து இரு மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறை திறக்கப்பட்டு, மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட 'மொபைல் டாய்லெட்' மாணவியரின் எண்ணிக்கைகு ஏற்ப போதுமானதாக இல்லாததால், மாணவியர் இயற்கை உபாதை கழிக்க அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறியதாவது:
மாணவியரின் வசதிக்காக, பிரபலமான ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் உள்ளதைப் போன்று வெஸ்டர்ன் ஸ்டைல் மாடலில், ஆட்டோமேட்டிக் கழிப்பறை அமைக்க அறிவுறுத்தி இருந்தேன்.
ஆனால், இந்தியன் மாடல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்தையும், ஆட்டோமேட்டிக் வெஸ்டர்ன் மாடலில் கழிப்பறை அமைக்க அறிவுறுத்தி உள்ளேன்.
கழிப்பறையின் கதவு உள்பக்கமாக திறப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதை வெளிப்புறமாக திறக்கும்படி மாற்றி அமைக்க அறிவுறுத்தி உள்ளேன்.
இப்பணிகள், 15 நாட்களில் முடிக்கப்பட்டு அதிநவீன கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

