/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
/
குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 27, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விசூர்:விசூர் ஊராட்சியில் பள்ளி இடைநின்றகுழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், பாரதியார் உண்டு உறைவிட பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
இம்மையத்தில், பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன துணை தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் நடந்தது.
இதில், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன ஒருங்கிணைப்பாளர் லலிதா சீனிவாசன் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினார்.