sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

/

ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு


ADDED : ஜூலை 24, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வளத்தாஞ்சேரியில், ஏரி மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வளத்தாஞ்சேரி ஏரி மதகு சேதமடைந்ததை அடுத்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், வளத்தாஞ்சேரி சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் நிலைத் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us