sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பசுமை நிழல் வலை குடில் சேதம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி வீண்

/

பசுமை நிழல் வலை குடில் சேதம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி வீண்

பசுமை நிழல் வலை குடில் சேதம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி வீண்

பசுமை நிழல் வலை குடில் சேதம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி வீண்


ADDED : அக் 21, 2024 01:42 AM

Google News

ADDED : அக் 21, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தாமல் ஊராட்சி, தைப்பாக்கம் துணை கிராமம் உள்ளது. இங்கு, 2021- -- 22ம் நிதி ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் செலவில், நாற்றங்கால் உற்பத்தி செய்யும் குடில் அமைக்கப்பட்டது.

இங்கு, நாற்றங்கால் பசுமை குடிலில், மா, நாவல், அத்தி ஆகிய பழமரங்கள் மற்றும் கொய்யா காய், புங்கன், இலுப்பை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, ஊராட்சிகளின் பிரதான சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் செடிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.

மரக்கன்றுகள் பதியன்போடும் போது, வெயிலில் கருகி விடாமலும் மற்றும் மழையால் சாய்ந்துவிடக்கூடாது என, பசுமை குடில் அமைக்கப்பட்டது.

இதை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பு செய்யாததால், பசுமை நிழல் வலை குடில் சேதம் ஏற்பட்டு, வெறும் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.

மேலும், நாற்று உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்ட மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் வீணாகி உள்ளன.

இதுதவிர, நாற்றங்கால் குடில் அருகே, பண்ணை குட்டைக்கு தோண்டிய மண் குடில் கம்பி மீது கொட்டி இருப்பதால், துருபிடிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, நாற்றாங்கால் குடிலை முறையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us