sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூன் 17, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 510 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று நடந்தது. இதில், பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, பட்டா திருத்தம், கல்குவாரி பிரச்னைகள் என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 510 பேர் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டரங்கு வெளியே, வீரசிவாஜி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர், பொதுச் செயலர் பலராமன் தலைமையில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் நெய்வது; மோசடி செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை கேட்பது; நடவடிக்கை எடுக்காத கைத்தறித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.

போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சு நடத்தி, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டரிடம் தங்களது பிரச்னைகளை நெசவாளர்கள் தெரிவித்து மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us