காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே, திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், அஸ்வினி, 30, என்ற பெண், கணவருடன் வசித்து வந்தார். கடந்த ஜூலை 23ம் தேதி, அஸ்வினியை, இருவர் அடித்து கொலை செய்து தப்பினர்.
இவ்வழக்கில், தமிழ்வாணன், 25, ராஜசேகர், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில், முதலில் கைது செய்யப்பட்ட பாலுச்செட்டிச்சத்திரம் என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த தமிழ்வாணன், 25, என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதையடுத்து, குண்டர் சட்டத்தில் தமிழ்வாணன் கைது செய்யப்பட்டார்.