/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரு கோவில் உண்டியல் வசூல் ரூ.8.98 லட்சம்
/
குரு கோவில் உண்டியல் வசூல் ரூ.8.98 லட்சம்
ADDED : நவ 23, 2024 08:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி சுவாமி கோவில் என அழைக்கப்படும் குரு உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஆறு உண்டியல்கள், காஞ்சிபுரம், ஹிந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு, செயல் கோவில் அலுவலர் கதிரவன் பக்தர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டன.
இதில், 8 லட்சத்து 98,716 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.