
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே 112 கிலோ குட்காவை பறிமுதல் செய்த கடம்பத்துார் போலீசார், அகரம் வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடம்பத்துார் போலீசார், நேற்று முன்தினம் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெகன் 32, என்பவரது கடையில் சோதனை செய்ததில், அங்குள்ள சாக்கு பையில், 112 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், ஜெகனை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

