sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை பாதி; சேதமான பள்ளம் மீதி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலை பாதி; சேதமான பள்ளம் மீதி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலை பாதி; சேதமான பள்ளம் மீதி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலை பாதி; சேதமான பள்ளம் மீதி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 21, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திம்மசமுத்திரம்: திம்மசமுத்திரம் ஊராட்சியில், மண் அரிப்பால் சாலை பாதியாகவும், சேதமடைந்த பள்ளம் மீதியாகவும் உள்ள அம்மன் குளம் சாலையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, நெட்டேரி, கருப்படிதட்டடை, நீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திம்மசமுத்திரம், வெள்ளைகேட், கீழம்பி புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், அம்மன் குளம் சாலை வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், திம்மசமுத்திரம் கிராம சாலை இணையும் இடத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து உள்ளதால், பாதி சாலையாகவும், மீதி பள்ளமாகவும் உள்ளது.

மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்த அம்மன் குளம் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us