ADDED : நவ 23, 2024 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மணி, 59, தீபா, 37, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 10,000 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, ஒரகடம் போலீசார், பண்ரூட்டி கண்டிகை கிராமத்தில், ஆய்வு செய்தனர். அப்போது, 58,000 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ்,19. என்பவரை கைது செய்தனர்.