sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'

/

புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'

புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'

புகார் தந்த பெண்ணை திட்டிய தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 23, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி:புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, 37 வயது பெண், தன் 'ஸ்கூட்டர்' ரக வாகனம் திருடு போனதாக, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், அவரது வாகனத்தை புதுப்பேட்டையில் இருந்து கைப்பற்றினர்.

இதையறிந்த பெண், தன் வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி, தலைமை காவலர் வேல்முருகனிடம் கோரியுள்ளார்.

அதற்கு காவலர் வேல்முருகன், நீதிமன்ற விசாரணைக்கு பிறகே வாகனம் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது காவலர் வேல்முருகன், அந்த பெண்ணை மரியாதைக் குறைவாக, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து அப்பெண், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்தார்.

விசாரித்த துணை கமிஷனர், பொதுமக்களுக்கான பணியின்போது, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தலைமைக் காவலர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us