sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை

/

மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை

மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை

மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை


ADDED : நவ 05, 2025 09:38 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு புற்று நோய் மருத்துவமனையில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், புறக்காவல் நிலையம் செயல்பட சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில், அண்ணா புற்றுநோய் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனை ஏற்கனவே 290 படுக்கை கொண்டதாக செயல்பட்டு வரும் நிலையில், 220 கோடி ரூபாய் மதிப்பில், 5 அடுக்கு கொண்ட பெரிய அளவிலான மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதில், 500 படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இம்மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகளும், பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர்.

ஆனால், இம்மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையம் இதுவரை இல்லை.

சமீபத்தில் நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், புற்றுநோய் மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற தேவையை, மாநில சுகாதார பேரவைக்கு அதிகாரிகள் எழுதி அனுப்பி உள்ளனர்.

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சி புரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் கூறியதாவது:

புற்றுநோய் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் போலீசார் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, போலீசார் பற்றாக்குறை இருப்பதால், 24 மணி நேரமும் எப்படி பாதுகாப்பு பணி வழங்க முடியும் என ஆலோசிக்கிறோம். எஸ்.பி.,யிடம் இதுபற்றி ஆலோசனை செய்து போலீசாரை பணியில் நியமிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us