/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
மாத்துார் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மாத்துார் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மாத்துார் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 27, 2024 12:27 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், ஒரகடம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரியும், ஆயிரக்கணக்கான ஊழியர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி பணிப்புரிந்து வருகின்றனர்.
இங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோர் கொட்டி குவிக்கப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் இயங்கிவரும் 10க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளை, இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர்.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.