sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

/

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு


ADDED : செப் 28, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 28, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிதண்டலம்:காவிதண்டலம் கூட்டுச்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டையில் இருந்து, காவிதண்டலம் வழியாக, ஒரக்காட்டுப்பேட்டை செல்லும் சாலை உள்ளது.

களியப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் இச்சாலை வழியை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.

இச்சாலையில், காவிதண்டலம் கூட்டுச்சாலை பகுதி உள்ளது. காவிதண்டலத்தில் செயல்படும் உணவகம், இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகளில் இருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளை கூட்டுச்சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.

இதனால், அப்பகுதி குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்வோர் முகம் சுளிக்கின்றனர்.

மேலும், இக்குப்பையால் கொசு உற்பத்தி, தொற்று நோய் போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, காவிதண்டலம் கூட்டுச்சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்றுவதோடு இனி குப்பை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us