/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலையோரம் குப்பை குவியல் வஞ்சுவாஞ்சேரியில் சுகாதார சீர்கேடு
/
நெடுஞ்சாலையோரம் குப்பை குவியல் வஞ்சுவாஞ்சேரியில் சுகாதார சீர்கேடு
நெடுஞ்சாலையோரம் குப்பை குவியல் வஞ்சுவாஞ்சேரியில் சுகாதார சீர்கேடு
நெடுஞ்சாலையோரம் குப்பை குவியல் வஞ்சுவாஞ்சேரியில் சுகாதார சீர்கேடு
ADDED : மே 11, 2025 11:41 PM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வண்டலுார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட் பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையோரம் படப்பை அடுத்த, வஞ்சுவாஞ்சேரி அருகே, குப்பை அதிக அளவில் குவிந்துள்ளது. வஞ்சுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்ளில் இருந்து வெளியேறும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் எற்படும் கடும் துர்நாற்றத்தால், வாகனங்களில் செல்பவர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இரை தேடி வரும் கால்நடைகள் திடீரென சாலைகளின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.