sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆக்கிரமிக்கும் வாகனங்களால் காந்தி சாலையில் கடும் நெரிசல்

/

ஆக்கிரமிக்கும் வாகனங்களால் காந்தி சாலையில் கடும் நெரிசல்

ஆக்கிரமிக்கும் வாகனங்களால் காந்தி சாலையில் கடும் நெரிசல்

ஆக்கிரமிக்கும் வாகனங்களால் காந்தி சாலையில் கடும் நெரிசல்


ADDED : பிப் 13, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 13, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, பெங்களூரு பிரதான சாலை உள்ளிட்டவை முக்கிய வழித்தடமாக உள்ளது. இங்கு, தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஹார்டுவேர்ஸ், மளிகை கடை உட்பட 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், தங்கள் அடிப்படை தேவைக்காக, தினமும் ஸ்ரீபெரும்புதுார் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடைகளுக்கு வருவோர், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.

இதனால், சாலை குறுகலாகி தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், அரசு பேருந்து செல்லும் போது, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது எதிர்பாராத விதமாக உரசும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us