/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் அரசு அலுவலக வளாகத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தத்தால் இடையூறு
/
வாலாஜாபாத் அரசு அலுவலக வளாகத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தத்தால் இடையூறு
வாலாஜாபாத் அரசு அலுவலக வளாகத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தத்தால் இடையூறு
வாலாஜாபாத் அரசு அலுவலக வளாகத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தத்தால் இடையூறு
ADDED : ஜூன் 29, 2025 12:31 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் விதிமீறல் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்படும் கனரக வாகனங்கள், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தம் செய்வதால் அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகம் அருகாமையில், தாசில்தார் அலுவலகமும் செயல்படுகிறது.
இரண்டு அலுவலகத்திற்கும் ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது.
வாலாஜாபாதில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தை கடந்துதான் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றாக வேண்டி உள்ளது.
இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி சாலைகளில், அதிக பாரம் ஏற்றுதல், தார்ப்பாய் மூடாமல் மற்றும் அதிவேகமாக இயக்குதல் என வீதிமீறல் தொடர்பான கனரக வாகனங்களை வருவாய் துறை பிடித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வருகின்றனர்.
அங்கு அந்த வாகனங்களின் உரிமங்கள் சரி பார்க்கப்பட்டு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படும் கனரக வாகனங்கள், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தின் மையப் பகுதி வழியில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
இதனால், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் மனுதாரர்கள் உள்ளிட்ட பலரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.