sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி

/

 உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி

 உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி

 உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி


ADDED : நவ 17, 2025 08:07 AM

Google News

ADDED : நவ 17, 2025 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: அவளூர் கூட்டுச்சாலையில், உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் உள்ள தால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலம் அடுத்து அவளூர் கூட்டுச்சாலை உள்ளது. இக்கூட்டுச் சாலையில் இருந்து, கணபதிபுரம் வழியாக இளையனார்வேலுாருக்கும், கண்ணடியன் குடிசை வழியாக அங்கம்பாக்கத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

அதேபோல, அவளூர் வழியாக ஆசூர், களக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இதனால், பேருந்தில் பயணிப்போர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேன் வாயிலாக செல்லும் நுாற்றுக்கணக்கானோர், அவளூர் கூட்டுச்சாலைக்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதனால், அவளூர் கூட்டுச்சாலையில் அதிகாலை துவங்கி, இரவு 10:00 மணி வரை பயணியர் கூட்டம் உள்ளது.

இப்பகுதியில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உயர்கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த மின்விளக்கு மூன்று மாதங்களாக பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பயணியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, அவளூர் கூட்டுச்சாலையில் பழுதான உயர்கோபுர மின்விளக்கை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us