sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி

/

 வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி

 வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி

 வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி


ADDED : நவ 13, 2025 10:07 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில், புதிய உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வாலாஜாபாத் - ஒரகடம் சாலை வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதி களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் பயணிக்கின்றனர்.

இச்சாலையில், வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனை அடுத்து ரயில்வே பாலம் உள்ளது. பாலத்தின் ஒருபுறம் கிதிரிப்பேட்டை, வெள்ளேரியம்மன் கோவில் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அணுகு சாலையும், மற்றொரு புறம் வாலாஜாபாத் இந்திரா நகர், சேர்க்காடு, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கான இணைப்பு சாலையும் உள்ளது.

ரயில்வே பாலத்திற்கான சாலையில் பல ஆண்டுகளாக மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்துக் குள்ளாகி வந்தனர்.

விபத்துகளை தவிர்க்க, ரயில்வே பாலம் மீது மின்வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 7.50 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே பாலம் மீது உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முன்தினம் உயர்கோபுர மின்விளக்கு இயக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் மின் விளக்கை இயக்கி துவக்கி வைத்தனர்.

வாலாஜாபாத் ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us