sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்

/

கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்

கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்

கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்


ADDED : பிப் 13, 2024 10:29 PM

Google News

ADDED : பிப் 13, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:சென்னை, குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் கரை பகுதி அமைந்துள்ளது. இந்த கரையில், எட்டு இடங்களில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வெளியேற்றும் மதகுகள் அமைந்துள்ளன.

இதில், மூன்றாவது மதகில் இருந்து துவங்கும் கால்வாய் கொல்லச்சேரி, மூன்றாம்கட்டளை, இரண்டாம்கட்டளை வழியாக அனாகாபுத்துார் அருகே அடையாற்றில் முடிகிறது.

தற்போது, இந்த கால்வாய் செல்லும் பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில், கொல்லச்சேரி, மூன்றாம்கட்டளை பகுதியில் உள்ள இக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் பரப்பளவு குறைந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கொல்லச்சேரி ஊராட்சி எல்லையை கடக்கும் கால்வாய் பல இடங்களில் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இதனால், கடந்த வடகிழக்கு பகுதியில் கொல்லச்சேரி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இந்நிலையில், கொல்லச்சேரி ஐந்து கண் பாலம் அருகே, கால்வாயோரம் இருந்த தனியார் நிலம் வழியே வெள்ள நீர் வடிந்து செல்லும். தற்போது இடம் மண் கொட்டி மேடு எழுப்பி வீட்டு மனை பிரிவாக மாற்றப்பட்டுவிட்டது.

இதனால், இனி வரும் காலங்களில் மழை நீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொல்லச்சேரியில் உள்ள இக்கால்வாயை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us