sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு

/

திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு

திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு

திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு


ADDED : மார் 17, 2024 02:03 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், திருப்புலிவனம் உள்ளது. திருப்புலிவனம், மருதம், வாடாதவூர் சடச்சிவாக்கம், ஆண்டித்தாங்கல், அழிசூர் உள்ளிட்ட கிராமத்தினர், இப்பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காஞ்சிபுரம்,- உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இப்பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி இல்லாததால் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனிடையே, திருப்புலிவனம் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்க, காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கநல்லுாரில், 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில், உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us