sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

/

விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 12:49 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:சென்னை --- கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி, இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, 21 அடி அகலமாக இருந்த இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 39 கி.மீ., தூரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், தேவையான இடங்களில் கான்கிரிட் தடுப்பு ஏற்படுத்துதல், வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதில், செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் அருகாமையில் உள்ள புளியம்பாக்கம் வரை மற்றும் வெண்குடி, ஒட்டிவாக்கம், திம்மராஜம்பேட்டை, கருக்குப்பேட்டை

வரையிலான சாலைகளில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்று இரவு, பகலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.

இச்சாலையில், ஏற்கனவே ஊராட்சி சார்பில் நிர்வகிக்கும் ஒருபுற சாலையோர மின் கம்பங்களில் தெருவிளக்கு ஒளிர்கின்றன. எனினும், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் மற்றொரு புறம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.

இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

திம்மராஜம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத்தின் புறவழிச்சாலை துவக்க பகுதி போன்ற அபாயகரமான சாலை வளைவுகளில் மின் விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

எனவே, காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், விரிவாக்கப் பணி மேற்கொண்ட பகுதிகளில் புதியதாக மின்கம்பங்கள் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us