sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

/

அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

அன்னதானகூடத்திற்கு செல்லும் பாதையில் தேங்காய் நார் கம்பளம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 15, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவில் வெளி பிரகார தரையில் உள்ள சூடு காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.

இதையடுத்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், மூலவர் சன்னிதி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு செல்லும் வெளி பிரகாரத்தின் பாதையில், தேங்காய் நார் கம்பளம் அமைக்கப்பட்டுள்ளதால். பக்தர்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

ஆனால், குளக்கரை வழியாக அரச மரத்தின் கீழ் அமைந்துள்ள நாகசிலைகள் அமைந்துள்ள பகுதிக்கும், அருகில் உள்ள அன்னதான கூடத்திற்கு செல்லும் வழியில் தேங்காய் நார் கம்பளம் அமைக்கப்படவில்லை. இதனால், இவ்வழியாக செல்வோர் தரையில் உள்ள சூடு காரணமாக நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

எனவே, கச்சபேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடத்திற்கு செல்லும் பாதையில், பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், தேங்காய் நார் கம்பளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us