sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்

/

சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்

சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்

சிலாம்பாக்கத்தில் அணைக்கட்டு பணி தீவிரம்


ADDED : மார் 07, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 07, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட சிலாம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு ஏற்படுத்த, நபார்டு திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டு பணிகள், கடந்தாண்டு துவங்கின.

ஆற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்டதாக புதிய அணைக்கட்டு கட்டப்படுகிறது. அணைக்கட்டு பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது தண்ணீர் அதிகளவு வந்ததால், பணிகள் தாமதம் ஆகியது.

இதையடுத்து, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், கட்டுமான பணிகள் மேலும் தாமதமாகின.

இந்நிலையில், இரு மாதங்களாக அணைக்கட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆற்றின் குறுக்கே, அணைக்கட்டுக்கு அடித்தளம் அமைக்கும் பணிகள், சுவர் கட்டும் பணிகளில், 25 சதவீத பணிகள் முடிந்திருப்பதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் முடியும் என, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தாண்டு பருவமழைக்குள் பணிகள் முடிந்தால், 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, 130 விவசாய கிணறுகளில், நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us