ADDED : மார் 31, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில் பீடரோகண ஜெயந்தி விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, பல்கலை துணைவேந்தர் சீனிவாசு தலைமை வகித்தார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
மருத்துவர் ரமணி மற்றும் சங்கரா கண் மருத்துவ அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லுாரி மாணவ - -மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.