/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று கோவில்களில் நகை, பணம் 'ஆட்டை'
/
மூன்று கோவில்களில் நகை, பணம் 'ஆட்டை'
ADDED : பிப் 16, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, மேட்டூரில் சீனிவாச பெருமாள் கோவில், எல்லை அம்மன் கோவில், எழில் நகரில் விநாயகர் கோவில்கள் உள்ளன.
வழக்கம்போல, நேற்று காலை, அர்ச்சகர்கள் கோவில் நடை திறக்கச் சென்றனர். அப்போது மூன்று கோவில்களின் பூட்டு மற்றும் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் இரண்டு சவரன் சுவாமி நகைகளும் திருட்டு போனது தெரிய வந்தது.
ஒரே இரவில், மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.