/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
/
வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
ADDED : அக் 05, 2024 11:24 PM

காஞ்சிபுரம், அகாஞ்சிபுரம் சி.என்.அண்ணாதுரை தெருவில், சத்திய ஞான சபை உள்ளது. இங்கு, ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா நேற்று விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 5:30க்கு திருப்பள்ளியெழுச்சியும், தொடர்ந்து, சன்மார்க்கக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆராதனையும் நடந்நது.
அதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கும், மதியம் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனையும், தொடர்ந்து வள்ளலாரின் நெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார்.
இரவு 7:15 மணிக்கு ஏழு தி,ரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஆடை வழங்கும் நிகழ்வு நடந்தது.