ADDED : நவ 24, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில், கால பைரவர் அவதரித்ததால், இதை கால பைரவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
இதில், நேற்று, மாலை 6:30 மணிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.