
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருளில் மூழ்கிய குளக்கரை சாலை
மின்விளக்கு அமைக்க வேண்டும்
கா ஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரை சாலையில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
இத்தெருவில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் உள்ளதால், இச்சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் வசிப்போரும், இச்சாலை வழியாக செல்வோரும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.