திறந்து கிடக்கும் வடிகால்வாய்; மாடவீதியில் விபத்து அபாயம்
திறந்து கிடக்கும் வடிகால்வாய்; மாடவீதியில் விபத்து அபாயம்
UPDATED : ஜூன் 10, 2026 03:02 PM
ADDED : ஜூன் 10, 2026 02:50 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்வாயின் கான்கிரீட் தளம், சேதமடைந்துள்ளதால், கால்வாய் திறந்து கிடக்கிறது.
இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயின் கான்கிரீட் தளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ரவிசங்கர்,
காஞ்சிபுரம்.
