sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி உலகளந்த பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா

/

காஞ்சி உலகளந்த பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா

காஞ்சி உலகளந்த பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா

காஞ்சி உலகளந்த பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா


ADDED : பிப் 06, 2025 12:52 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடக்கும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தைமாத பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலை, ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும், உலகளந்த பெருமாள் வீதியுலா வந்தார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்வசமும் நடந்தது.

நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை மணிக்கு சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us