sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வருகை செங்கல்பட்டில் பரபரப்பு

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வருகை செங்கல்பட்டில் பரபரப்பு

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வருகை செங்கல்பட்டில் பரபரப்பு

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வருகை செங்கல்பட்டில் பரபரப்பு


ADDED : ஜூலை 27, 2011 03:10 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : கோர்ட் ஊழியர்கள், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை, ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.மாமல்லபுரம் டி.கே.ரோடை சேர்ந்தவர் சகாதேவன்.

இவருக்கு சொந்தமான புஞ்சை நிலம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது.கடந்த 1994ம் ஆண்டு, சாலை விரிவாக்கத்திற்காக, சகாதேவனுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் 39 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.ஒரு சென்டுக்கு, 200 ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. ஒரு சென்ட் நிலத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி, செங்கல்பட்டு கூடுதல் சார்பு கோர்ட்டில், சகாதேவன் வழக்கு தொடர்ந்தார். 2000ம் ஆண்டு அக்., 10ம் தேதி, ஒரு சென்ட் நிலத்திற்கு 9,000 ரூபாய், இழப்பீட்டுத் தொகையாக வழங்கக் கூறி, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.,விற்கு, கூடுதல் சார்பு கோர்ட் உத்தரவிட்டது.அதிகாரிகள், உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடித்தனர். 2003ம் ஆண்டு, சகாதேவன் இறந்து விட்டார். அவரது வாரிசு தாரர்களான கண்ணபிரான், ரவிச்சந்திரன், கலைச்செல்வி, தீனதயாளன், டில்லிபாபு, சேகர் ஆகியோர், இழப்பீட்டுத் தொகையைப் பெற, செங்கல்பட்டு கூடுதல் சார்பு கோர்ட்டை அணுகினர்.கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில், சகாதேவனின் வாரிசு தாரர்களுக்கு சேர வேண்டிய நில இழப்பீட்டு தொகையை, வட்டியுடன் சேர்த்து, 71 லட்சத்து 66 ஆயிரத்து 761 ரூபாய் வழங்க வேண்டுமென, கோர்ட் உத்தரவிட்டது.அப்போது, கோர்ட் ஊழியர்கள், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., கூறியதால், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.ஆனால், அதன் பின்பும் இழப்பீடு தராததால், நேற்று காலை 11.35 மணிக்கு, மீண்டும் கோர்ட் ஊழியர்கள், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். ஆர்.டி.ஓ., அலேன் சுனேஜா,' நான் புதியதாக பதவி ஏற்றுள்ளேன். சில தினங்களில் இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார். அதை ஏற்று கோர்ட் ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us