ADDED : பிப் 15, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பெரியார் நகர், வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக், 46. இவர், இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இவர் இருசக்கர வாகனத்தில், ஓரிக்கை நோக்கி, கடந்த 13ம் தேதி சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், கார்த்திக்கை மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
அப்போது, அவரின் பாக்கெட்டில் இருந்து, 1,100 ரூபாயை மிரட்டி பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், கார்த்திக் புகார் அளித்துள்ளார்.
வழிப்பறி செய்தவரை போலீசார் தேடியதில், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தர்மதுரை, 24, என்பது தெரியவந்தது.போலீசார், தர்மதுரையை நேற்று கைது செய்தனர்.

