/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு
/
ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு
ADDED : பிப் 02, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்கு வழி சாலை அமைக்கும்போது, அகற்றப்பட்ட ஆபத்சகாய விநாயகர் கோவில், தற்போது புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜன., 31ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வி நடந்தது. நேற்று காலை 7:30 மணி அளவில், இரண்டாம் கால பூஜை மற்றும் காலை 9:30 மணி அளவில் கலச புறப்பாடு நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 9:50 மணிக்கு, தமிழ் முறைப்படி விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீரை ஊற்றி குட முழுக்கு செய்யப்பட்டது.

