/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : ஜூன் 09, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது.
இதில், காலை 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை உத்சவத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி உற்சவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் பிரகாரத்தில் வீதியுலாவும், காஞ்சி ஜெயஸ்ரீ நாட்டியாலயா மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.