sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதர் கோவில் உடையவர் சன்னிதியில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

/

வரதர் கோவில் உடையவர் சன்னிதியில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

வரதர் கோவில் உடையவர் சன்னிதியில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

வரதர் கோவில் உடையவர் சன்னிதியில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 17, 2025 09:58 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடைசியாக 2012ம் ஆண்டு, ஜூலை மாதம், 5ம் தேதி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின், 2023 - -24ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜ கோபுரம், கோவில் வளாகத்தில் உள்ள உடையவர் சன்னிதி, பெரியாழ்வார் சன்னிதியில் திருப்பணியை துவக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து கோவிலில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில், உடையவர் சன்னிதி, 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழுது பார்த்து புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து, நாளைமறுதினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று, காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.

நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு கும்ப ஆராதனம், யாகசாலை, மஹா பூர்ணாஹூதி கும்ப புறப்பாடு நடக்கிறது. காலை 8:30 மணியில் இருந்து, 9:30 மணிக்குள் உடையவர் சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us