/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின் அழுத்தம் பேரிஞ்சம்பாக்கத்தினர் அவதி
/
குறைந்த மின் அழுத்தம் பேரிஞ்சம்பாக்கத்தினர் அவதி
ADDED : அக் 01, 2024 06:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஐந்து மாதங்களுக்கு மேலாக நிலவிவரும் குறைந்த மின் அழுத்தத்தால் டி.வி., மின்விசிறி, மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதியில் சீரான மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

