/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை
/
மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை
மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை
மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் சிவாஸ்தானத்தில் தெப்போற்சவம் விமரிசை
ADDED : ஜன 07, 2024 12:29 AM

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியின்படி, காஞ்சிபுரம் சங்கரமடம் 68வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சஸ்வதி சுவாமிகளின் 30வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் நாளை காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடக்கிறது.
இதில், மஹா பெரியவாள் அதிஷ்டானத்தில், காலை 7:00 மணிக்கு ருத்ர ஏகாதசியும், மதியம் 1:00 மணிக்கு மஹா பெரியவாளுக்கு மஹா அபிஷேகமும் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலம் நடக்கிறது.
வார்ஷிக மஹோற்சவத்தை ஒட்டி, காஞ்சிபுரம் தேனம்பாக்கம், சிவாஸ்தானத்தில் காமாக்ஷி அம்பாள் சமேத பிரும்மபுரீஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் நேற்று முதல் நாள் தெப்போற்சவம் விமரிசையாக நடந்தது.
இதில், இரவு 7:40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிவன், பார்வதி, மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்தனர். தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் தெப்போற்சவம், இன்று ஐந்து சுற்றும், நிறைவு நாளான நாளை, ஏழு முறையும் திருக்குளத்தில் தெப்பல் வலம் வருகிறது.