sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை

/

 சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை

 சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை

 சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை


ADDED : டிச 14, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவம், நாளை மறுதினம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடக்கிறது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது அனுக்கிரகத்துடன், மஹா சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம், மகா சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன் நடைபெறுகிறது.

இதில், வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

வார்ஷிக ஆராதனை மகோத்சவம் நாளை மறுதினம் , காலை 7:00 மணிக்கு, ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

வார்ஷிக ஆராதனை மகோத்சவத்திற்கான ஏற்பாட்டை, சங்கரமடத்தின் ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us