sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்


ADDED : ஏப் 16, 2025 06:56 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, கடந்த 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி தினமும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம் பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார். அதன்படி, 16ம் நாள் விழாவான நேற்று, இடும்பி முக்கால குறி என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக, நாளை முதல், வரும் 30ம் தேதி வரை, 13 நாட்களுக்கு, தினமும், இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடக்கிறது.

இதில், முதல் நாளன்று வில் வளைப்பு என்ற தலைப்பிலும், தொடர்ந்து சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுணன் தபசு, குறவஞ்சி, விராட பருவம், கிருஷ்ணன் துாது, அரவான்களபலி, கர்ணமோட்சம், பதினெட்டாம்போர் என்ற தலைப்புகளில் நாடகம் நடக்கிறது.

இதில், 29ம் தேதி, வேகவதி நதிக்கரையில் காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும், 30ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us