/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல் மஹாபாரத விழா துவக்கம்
/
காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல் மஹாபாரத விழா துவக்கம்
காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல் மஹாபாரத விழா துவக்கம்
காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல் மஹாபாரத விழா துவக்கம்
ADDED : மார் 31, 2025 11:51 PM
காஞ்சிபுரம்சின்ன காஞ்சிபுரம், கோகுலம் வீதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, வரும் 4ம் தேதி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடக்கிறது.
விழாவையொட்டி தினமும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம் பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார்.
வரும் 18ம் தேதி முதல், 30ம் தேதி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடக்கிறது.
ஏப்., 27ம் தேதி அரவான் களபலியும், 29ம் தேதி, வேகவதி நதிக்கரையில் காலை, துரியோதன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும். 30ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.