sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரூ.2 லட்சம் வழிப்பறி ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை

/

ரூ.2 லட்சம் வழிப்பறி ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை

ரூ.2 லட்சம் வழிப்பறி ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை

ரூ.2 லட்சம் வழிப்பறி ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை


ADDED : நவ 11, 2025 11:28 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஸ்கூட்டரில் சென்ற நபரை நோட்டமிட்டு, கத்தியை காட்டி மிரட்டி, 2 லட்சம் ரூபாயை பறித்து தப்ப முயன்ற ஒருவரை, பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பணத்தோடு தப்பியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அமீது, 37. இவர், அதே பகுதியில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மாலை, அரும்பாக்கத்தில் தன் நண்பரிடம், 2 லட்சம் ரூபாயை வாங்கி, அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தன் வங்கி கணக்கில் செலுத்த முயன்றார்.

இரண்டு வங்கி இயந்திரங்களில் பணத்தை போடமுடியாததால், அரும் பாக்கம், பசும்பொன் தெரு வழியாக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, அவரை ஸ்கூட்டரில் பின் தொடர்ந்த இருவர், அமீதுவிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி பணத்தை பறித்து தப்பினர்.

அவர் சத்தம் போடவே, அங்கிருந்த சிலர், தப்பியோடிய திருடர்களில் ஒருவரை மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் பணத்துடன் தப்பினார்.

விசாரணையில், பிடிபட்டவர் பெரம்பூரை சேர்ந்த கார்த்திக், 25, என்பதும், தப்பியோடியவர் அவரது கூட்டாளியான வியாசர்பாடியை சேர்ந்த ஜீவா, 27, என்பதும் தெரிந்தது.

இருவரும், அமீது பணம் வாங்கி வருவதை நோட்டமிட்டு திருடியது தெரிந்தது. பணத்துடன் தப்பியோடிய ஜீவாவை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us