/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்
/
ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்
ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்
ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்
ADDED : மார் 23, 2025 08:01 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத குணம்தந்தநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த நவ.2ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று, இக்கோவிலில் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில், கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.