/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம் காஞ்சி, திருப்போரூர், திருத்தணியில் கொடியேற்றம்
/
மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம் காஞ்சி, திருப்போரூர், திருத்தணியில் கொடியேற்றம்
மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம் காஞ்சி, திருப்போரூர், திருத்தணியில் கொடியேற்றம்
மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம் காஞ்சி, திருப்போரூர், திருத்தணியில் கொடியேற்றம்
ADDED : பிப் 15, 2024 10:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி பிரம்மோற்சவ விழா, நேற்று காலை 5:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் உற்சவமான நேற்று காலை, வெள்ளி விருஷப வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். இரவு தங்க மான் வாகன உற்சவம் நடந்தது.
இன்று காலை மகரத்திலும், இரவு சந்திர பிரபையிலும், நாளை காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார்.
இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான பிப்., 23ல், இரவு வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கர மடம் மேலாளரும், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமுமான சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல் முறையாக இந்தாண்டு, பிரம்மோற்சவ விழா துவங்கியது.
காலை 10:30 மணிக்கு, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. மூலவர் முருகன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார்.
காலை 8:00 மணிக்கு உற்சவர் கொடி மரத்தின் எதிரே உற்சவர் முருகப்பெருமான் வந்தார். சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.
இதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொடி கயிறை, கோவில் சிவாச்சாரியார்கள் ஏற்றினர். கோவில் வட்ட மண்டபத்தில் அதிகாலை 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், நேற்றிரவு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.
கொடிமரத்திற்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள் நீர் மற்றும் கலச நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொடியேற்றம்நடந்தது.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள் 'ஒற்றீசா - தியாகேசா' என விண்ணதிர முழங்கினர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21, திருக்கல்யாணம் 23ம் தேதி நடக்கிறது.