sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாத்துார் சர்வீஸ் சாலையில் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

/

மாத்துார் சர்வீஸ் சாலையில் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

மாத்துார் சர்வீஸ் சாலையில் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு

மாத்துார் சர்வீஸ் சாலையில் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 08, 2025 12:40 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம், சென்னக்குப்பம், மாத்துார், வல்லம் வடகால், போந்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் அடிப்படை தேவைக்காக இந்த சாலையை பயன்படுத்த, ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

தவிர, ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, கார், பைக், தொழிற்சாலை பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், வல்லக்கோட்டை, மாத்துார் பகுதிகளில் இயங்கிவரும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர்.

இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

மேலும், குப்பையில் உணவு தேடி வரும் கால்நடைகள், சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது.

எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us