ADDED : மார் 14, 2026 03:05 AM

அ நிறம் | அளவு
மத்திய அரசின் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் சார்பில், தேசிய சாஸ்திரிய போட்டிகள், காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் நடந்தன.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முன்னணி பேராசிரியர்கள், அறிஞர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில், 'ஜோதிஷ சாஸ்திர சலாகா' பிரிவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர், கார்த்திக் ராஜா சிவம், வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, துணைவேந்தர் சீனிவாச வர்கேடி பதக்கத்தை வழங்கினார். கார்த்திக் ராஜா சிவம் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் மகன்.
