sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

1,063 பேருக்கு மருத்துவ பரிசோதனை

/

1,063 பேருக்கு மருத்துவ பரிசோதனை

1,063 பேருக்கு மருத்துவ பரிசோதனை

1,063 பேருக்கு மருத்துவ பரிசோதனை


ADDED : செப் 22, 2024 02:44 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தில், கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் நேற்று நடந்தது.

மாம்பாக்கம், திருவானைக்கோவில், ராஜம்பேட்டை, விச்சூர் உள்ளிட்ட கிராமத்தினர் இம்முகாமில் பங்கேற்று பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

படாளம் கற்பக விநாயகம் மருத்துவமனையில் இருந்து, மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு, இதய நோய், நுரையீரல், எலும்பு மற்றும் நரம்பு பாதிப்பு, கண் மருத்துவம், பெண்கள் மகப்பேறு பிரிவு, காசநோய், நீரழிவு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை குறித்தும் இம்முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உத்திரமேரூர் தி.மு.க, - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, 10 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பரிசு பெட்டகங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டங்கள் 5 பேருக்கு வழங்கினார். மாம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 425 ஆண்கள், 638 பெண்கள் என 1,063 பேர்களுக்கு இம்முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 46 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இதில், உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணதாசன், சுகாதார மேற்பார்வையாளர் பவுல் யேசுதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us