/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
/
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
ADDED : ஏப் 06, 2025 07:24 PM
காஞ்சிபுரம்:பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல், ‛நடப்போம் நலம் பெறுவோம்' என்ற எட்டு கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நடத்தி வருகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' இயக்கம் சார்பில், நடைபயிற்சி நேற்று நடந்தது.
இதில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மதிப்புறு செயலர் டாக்டர் முத்துக்குமரன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நடைபயிற்சியை துவக்கி வைத்தனர்
நடைபயிற்சியில் மருத்துவம், மாநகராட்சியைச் சேர்ந்த பல்வேறு துறையைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டார சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழு பணியாளர்கள் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.